my images
திரு நடராஜா சரவணபயவானந்தன அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 22 2023
திரு செல்லையா நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 06 2023
திரு முருகுபிள்ளை யோகரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 22 2023
திரு உதயன் (ஒட்டிசுட்டான்) அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 25 2023
திரு கிருஷணர் லோகநாதன் (லோகேஷ்) அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 1 2023
திரு சிவசம்பு பரமானந்தம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 06 2023
திருமதி இராசலட்சுமி சண்முகநாதன் (மகிழம்மா) அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 09 2023
திரு ராமசாமி கேதீஸ்வரன் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மேசெப்டம்பர் 19 2023
திரு துரைரத்தினம் இராசையா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 08 2023
திருமதி மல்லிகாதேவி கனகசபேசன் (சின்னசோலை) அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 11 2023
திரு தம்பையா குமாரசாமி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூலை 22 2024
திருமதி சகுந்தலா பாலரூபன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 26 2024
திருமதி புவளேஸ்வரி சந்தையனார் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 22 2024
திருமதி மங்களவதனி இராசேந்திரம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 26 2024
திரு விசயரத்தினம் பாஸ்கரன் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 16 2024
திருமதி சேது ஸ்ரீகாந்தன் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - நவம்பர் 19 2024
திருமதி சரசுவதி ஐயாத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஜனவரி 18 2025
வளலாய் வரைபடத்தை பார்வையிட இங்கு கிளிக்குக Click here to see the Valalai Map
சுவிஸ்லாந்து வாழ் இடைக்காடு வளலாய் மக்கள்
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
இலண்டன் ஐக்கிய இராச்சியங்கள் வாழ்
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
இவ்வளலாய் ஆளுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள இவ்விடத்தல் கிளிக்குக.
பாரதி சனசமூக நிலைய விபரங்களைப் படிக்க இவ்விடத்தில் 'கிளிக்'குக
வளலாய் பிள்ளையார் பாலஸ்தாபனக் குடமுழுக்கு, குடமுழுக்கு,
தேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்
ஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா
கிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட
பொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்
(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட
காணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க
வளலாய் ஒன்றுகூடல் 2016 இல் - நன்றி உரையின் ஒரு பகுதி
ஞானரூபனின் மகன் செல்வன் அஜே பாலசுப்ரமணியம் - வசந்தம் 2016
ஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி
மற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்
ஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட
வயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக
இதிகாசங்கள், சர்வ மத இலக்கியங்கள், தேவார திருவாசகங்கள்,
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா
VALALAI RURAL DEVELOPMENT SOCIETY
Idaikkadu Maha Vidhiyalaya Old Students Association - Canada
IDAIKKADU OLD STUDENTS 2014
SWISS IDAIKKADU VALALAI GET TOGETHER
Idaikkadu Valalai Welfair Association - UK
வளலாய் பிள்ளையார் கோயில் விழாக்கள்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
பெரியதம்பிரான் ஆலய விபரங்களைப் படிக்க இங்கு கிளிக்குக
கனடா தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளலாய் கிராமம் பற்றிய
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'
என்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்
சிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்
January 18 2025
January 13 2025
December 31 2024
December 24 2024
December 22 2024
வளலாய் இரவு 2024
தானியங்கி நிழற்படங்கள்
my Image
கீழேயுள்ள சட்டகத்தில் வளலாய் இரவு படங்களை நீங்கள் விரும்பியவாறு முன்புறமாகவோ பின்புறமாகவோ நகர்த்திப் பார்க்க முடியும்
December 12 2024
November 19 2024
இறுதி சடங்குகள்
21.11.2024 வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் (இலங்கை நேரம்)
424/1/1 (14), Kilnar lane, K.K.S Road, Jaffna.
November 17 2024
திரு விசயரத்தினம் பாஸ்கரன்
             தோற்றம்: ஆகஸ்ட் 23 1957            மறைவு: நவம்பர் 16 2024
வளலாயைப் பிறப்பிடமாகவும் வளலாய் மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு விசயரத்தினம் பாஸ்கரன் நவம்பர் 16 2024 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான விசயரத்தினம், விசாலட்ச்சிபிள்ளை இணையரின் அன்பு மகனும் காலஞ்சென்ற இராசதுரை, அன்னமுத்து இணையரின் பாசமிகு மருமகனும்
சிவேஸ்வரியின் அன்புக் கணவனும் கிசான், அஸ்வின், ஆதுசன் மற்றும் அஸ்மிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்
வீரசிங்கம், விசயலட்சுமி, ஆனந்தவல்லி, விசயகுமார், வேல்முருகன் மற்றும் பாலா விஜே ஆகியோரின் பிரியமான சகோதரரும்
காவேரி, ரவீந்திரன், மகேந்திரன், தயாளினி, பாமினி மற்றும் சிவாஜினி ஆகியோரின் மைத்துனரும்
மனோரஞ்சிதமலர், மதனமோகன், மோகனா, மதிவதனி, ரவிசந்திரமோகன் மற்றும் சுகிர்தலட்சுமி ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்
ராஜேஸ்வரி (கந்தசாமி), ராஜேஸ்வரன் (ராஜினி) மற்றும் சதீஸ்வரி (முரளீதரன்) ஆகியோரின் மைத்துனரும்
காஞ்சனா, கஜரூபன், சோபனா, சௌமியா மற்றும் அஷ்சனா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Kishan: +1 (647) 979-5196
Aswin: +1 (647) 781-5196
Kajan: +1 (514) 836 8157
Ananthy Mahendran +1 (416) 460 4075
Bala Vijey: +1 (647) 641-7583
October 31 202024
December 24 2018
வளலாய் வலம் 2018
December 6, 2018
வளலாய் பெரிய நாகதம்பிரான்
எங்கள் பதியே
வாழ்வளிக்கும் வளங்கள் சூழ்ந்த
அருள் நிதியே
வயல் வெளியில் குளக்கரையில் அமர்ந்தாய்
வாகான இருப்பிடமே கொண்டாய் தொன்மையும்நிறைந்திருக்கும்
தோட்டங்களோ பரந்திருக்கும்
வாட்டமில்லாப் பயிர்களங்கே
வகைவகையாய்செழித்திருக்க
ஆவினமும்ஆடுகளும்
அங்கங்கே புல் மேயும்

வான் கவிழ்த்த மழை நீரோ
வளலாயைச் சுற்றிவரும்
கரைசேரக் கடலிருந்தும் -உன்
கழல் சேரத் தவமிருக்க
குளமாக நீர் கூடி -அதில்
குதூகலமாய் அலையாடும்
காதினிக்கும் இசைத்தென்றல்
நாதங்கள்தூவும்
குளிர் பரவக் குளக் காற்றோ
குற்றால சுகம் சேர்க்க
கடல் தவழ்ந்த காற்று உந்தன்
கழல் தழுவி மணங்கமழும்
பாதங்கள் உனைநாடிப்
பக்தியுடன் ஏகும்
பொங்கலிட்டுப் படையல் வைத்து
பண்ணிசைகள் பாட
பார்க்குமிடம் எல்லாமே
பரவசமே தோன்றும்
September 24, 2018
வளலாய் மண்ணே வணக்கம்
என்றும்நீயே நாம் எனக் கொண்டோம்
இன்பம் நல்கிடும் தாயே
உருவம் எம்வழி உயிரோ உன்வழி
உறவாய் வலம் வரும் ஊரே
இடமாய் இருப்பினும் இருப்பாய் கண்ணென
எங்கள் கருத்தினில் நீயே
இனிதாய்நாவினில் இசைப்போம் உனையே
அழகின் உறைவிடமே வளலாயே
நெய்தலும்மருதமும் நிலமெனக் கொண்டே 
நீரிலே அமுதத்தைச் சுரக்கிறாய் 
பாலையின்பண்புகள் பலகொண்ட போதும்
வாழ்வினில்அதை நீ மறைக்கிறாய்
உழவுத் தொழிலை உயர்வெனக் கொண்டோர்
உணர்வினைப்புரிந்ததனாலே
செம்மையாய்இருந்து பசுமையாய்ப் பரந்து
எம்மை நீ என்றுமே வளர்க்கிறாய்
இந்துமாவாரியின்இசைகொள் அலைகள்
வந்தே அணைத்துனை வாழ்த்தும்
வானும் மண்ணும் வளங்களைத் தூவி
காணும் பொழுதெல்லாம் போற்றும்
கல்வியும்செல்வமும் கரையிலாப் பெருமையும்
வல்லமை பெருகிய மனமும்
வழிவழி கொண்டவர் வளலாய் மக்கள்
வளர்த்திடவளர்வாய்  நீயே
பாரெல்லாம்பரந்து நாம் பலவழி சென்றபோதும்
ஊர் மணம் கமழவே வாழ்வோம்
உயர்வுகள்எல்லாம் நீ பெறக்  கண்டு
உவகையை பரிசாய் பெறுவோம் 
நேரிய வாழ்வில் நிகழ்வுகள் சேர்ப்போம் -உந்தன்
நினைவுகள்சரமாய் தொடுப்போம்
நெஞ்சமும்நெகிழ நீள்விழி மலர
நிதமுனைப்பாடி மகிழ்வோம்
இம் மண்ணின் பாடல் வரிகள்
மண்ணின் மகள் கவிதாயினி சுதா குமரன்

July 19, 2019

கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய வரவு செலவு அறிக்கை
2018-2019
விபரம் கனேடிய டாலர்களில்
வரவு செலவு
கையிருப்பு யூலை 14 2018 2325.66  
ஒன்றுகூடலில் சேர்ந்த பணம் 4090.00

 

வளலாய் ஐயர் சம்பளத்திற்கு என தபோ டிலோஜன், தம்பு மணி, க. கருணாமூர்த்தி க. சிவபாலன் (அப்பன்), வீரசிங்கம், பாலசந்திரன், நா. சின்னத்தம்பி  (சின்னண்ணை), சின்னத்தம்பி குடும்பம் (ரத்தினம்), ஏகாம்பரம் குடும்பத்தினர், மதிவதனி சத்தியநாதன், த. மதனமோகன் (மோகன்) வழங்கிய வகையில் 1100.00  
மருத்துவர் சிவேஜன் சிவபாலன் 1000.00  
Ms பானுஜா கருணாமூர்த்தி 1000.00  
ஒன்றுகூடல் செலவு யூலை 15 2018   699.37
சண்முகநாதன் வாழ்வாதாரஉதவி - ஆகஸட் 15 2018   250.00
சா த மாணவர்கள் (2017 குழு) -ஆகஸட் 10 2018   250.00
அமரர் குட்டியின் மனைவி - செப்டம்பர் 03 2018   500.00
AMTM School ஆசிரியர் சம்பளம் - அக்டோ 29 2018   608.00
மலர் வளையம் - ஆறுமுகம் JP - நவம்பர் 10 2018   140.00
வளலாய் வலம் விழியம் - டிசம்பர் 31 2018   195.00
மலர் வளையம் - ராஜசேகரம் சு - பிப்ரவரி 02 2019   150.00
ஐயர் சம்பளம் - மார்ச் 18 2019   1100.00
     
கல்வி 2018
க.பொ.த. மாணவர் குழு
மார்ச் 06 2019 308.00   2,685.00
ஏப்ரல் 01 2019 311.00
மே 21 2019 2066.00
 

 

 
கையிருப்பு ஆகஸ்ட் 03 2019   2,938.29‬
  9515.66 9515.66

July 12, 2018

கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய வரவு செலவு அறிக்கை

2017 - 2018

விபரம்

கனேடிய டாலர்களில்

வரவு

செலவு

கையிருப்பு (யூலை 15 2017)

2075.02

 

ஒன்றுகூடலில் சேர்ந்த பணம்

4460.00

 

வளலாய் ஐயர் சம்பளத்திற்கு என தபோ டிலோஜன், தம்பு மணி, க. கருணாமூர்த்தி க. சிவபாலன் (அப்பன்), வீரசிங்கம், பாலசந்திரன், நா. சின்னத்தம்பி  (சின்னண்ணை), சின்னத்தம்பி குடும்பம் (ரத்தினம்), ஏகாம்பரம் குடும்பத்தினர், மதிவதனி சத்தியநாதன், த. மதனமோகன் (மோகன்) வழங்கிய வகையில்

1100.00

 

டாக்டர் சிவேஜன்

1000.00

 

கணபதிப்பிள்ளை கருணாமூர்த்தி

1000.00

 

ஒன்றுகூடல் செலவு யூலை 15 2017

 

940.36

ஸ்ரீமாமா மாமி மலர் வளையம் யூலை 5 2017

 

100.00

ராசி (பழனி)  ஒக்ரோபர் 22 2017

 

100.00

நாகமுத்து சுப்பிரமணியம் நவம்பர் 22 2017

 

100.00

சின்னகடவுள் நவம்பர் 30 2017

 

200.00

ஐயர் சம்பளம் வளலாய்க்கு அனுப்பிய வகையில் மார்ச் 5 2018

 

1100.00

இராசையா தர்மரத்தினம் மார்ச் 6 2018

 

500.00

வளலாய் அ.மி.த.க. கலவன் பாடசாலை
மார்ச் 25 2018

 

1652.00

சிறப்பு சித்தி உயர்தரம் மற்றும் வடக்கு மாணவர் தேவைக்கு ஏப்ரல் 07 2018

 

1000.00

செல்வராசா வெவோகா ஏப்ரல் 10 2018  

425.00

ஸ்ரீஸ்கந்தராஜா நல்லையா யூன் 22 2018  

140.00

சிறப்புச் செய்தி எய்திய சாதாரண தர மாணவர் களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்க
யூன் 28 2018

 

1052.00

கையிருப்பு யூலை 14 2018  

2325.66

 

9635.02

9635.02

 

July 5 2017
கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய வரவு செலவு அறிக்கை

2016 - 2017

விபரம்

கனேடிய டாலர்களில்

வரவு

செலவு

கையிருப்பு (யூலை 23 2016)

672.35

 

ஒன்றுகூடலில் சேர்ந்த பணம்

3515.00

 

திருமதி விஜயலட்சுமி கருணாமூர்த்தி வளலாய் பிள்ளையார் கோயிலில் வெள்ளிக்கிழமை மேலதிக பிரசாதம் வழங்குவ தற்கெனக் கொடுத்த பணம்

500.00

 

வளலாய் ஐயர் சம்பளத்திற்கு என தபோ டிலோஜன், தம்பு மணி, க. கருணாமூர்த்தி க. சிவபாலன் (அப்பன்), வீரசிங்கம், பாலசந்திரன், நா. சின்னத்தம்பி (சின்னண்ணை), சின்னத்தம்பி குடும்பம் (ரத்தினம்), ஏகாம்பரம் குடும்பத்தினர், மதிவதனி சத்தியநாதன், த. மதனமோகன் (மோகன்) வழங்கிய வகையில்

1100.00

 

மொன்றியோல் வாழ் வளலாய் உறவு வழங்கிய வகையில்

200.00

 

2016 ஒன்றுகூடல் - தணல் அடுப்பில் வேகவைப்பதற்கான இறைச்சி கொள்வனவு மற்றும் வெற்றிக் கோப்பைகள் கொள்வனவு (யூலை 23 2016)

 

741.33

திரு செல்வத்துரை சரவணமுத்து - மலர்வளையம்
(ஒக்ரோபர் 28 2016)

 

120.00

திருமதி தங்கம்மா கந்தையா - மலர்வளையம்
(சனவரி 27 2017)

 

120.00

வெள்ளிக்கிழமை மேலதிக பிரசாதம்
(பெப்ரவரி 11 2017)

 

250.00

திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் - மலர்வளையம்
(மார்ச் 17 2017)

 

150.00

வளலாய் ஐயர் சம்பளம் அனுப்பிய வகையில் (மார்ச் 20 2017)

 

1100.00

2017 - சிறப்புப் வெற்றிகள் பெற்ற வளலாய் மாணவர்களுக்கு ஆறுதல் பரிசில்கள் வழங்கிய வகையில் (மார்ச் 25 17)

 

151.00

வெள்ளிக்கிழமை மேலதிக பிரசாதம்
(மே 16 2017)

 

250.00

திரு தம்பு சந்திரபாபு
(யூன் 10 2017)

 

150.00

2016 - சிறப்புப் வெற்றிகள் பெற்ற வளலாய் மாணவர்களுக்கு ஆறுதல் பரிசில்கள் வழங்கிய வகையில் (யூன் 22 17)  

880.00

கையிருப்பு (யூலை 15 2017)

 

2075.02

 

5987.35

5987.35

July 30, 2016

 கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி பரிசளிப்பு விழா நிகழ்வுகளின் நிழல்கள் 11ம் பக்கம், ஆடி 29 ம் திகதிய தினக்குரல் நாளிதழில் - ஏனைய பிரமுகர்களுடன் வளலாயைச் சேர்ந்த அதிபர் வேலழகன் சண்.

May 18, 2016

வளலாயைச் சேர்ந்தவரும் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபருமான திரு. வேலழகன் சண் அவர்கள் திறந்த வெளி பல்கலைக்கழகம், பொதுநல வாய நாடுகளின் கற்றலுக் கான பிரிவினருடன் இணைந்து நடாத்தும் ஆசிரியர் கல்வியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அதற்கான பட்டமளிப்பு விழா சர்வதேச பண்டாரநாயக்க மண்டப அரங்கில் இடம்பெற்றது அச்சமயத்தில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

திரு. வேலழகன் சண் MATE (I)

[Master of Arts in Teacher Education (International)

திரு வேலழகன் சண் அவர்கள் அடைந்த இவ்வெற்றிக்காக அவரை மனமார வாழ்த்தும் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம், அவர் தன் வாழ்வில் மேன்மேலும் வெற்றிகளையும் பதவி உயர்வுகளையும் பெற எல்லாம் வல்ல வளலாய் பிள்ளையாரை வழிபடுகின்றனர்

December 02, 2016

April 28, 2016

Dr. சுதர்சன் கணபதிப்பிள்ளை

வளலாய் இணையத்தினால் அடையாளங்காணப்பட்ட வளலாய் ஆளுமைகளில் ஒருவரான திரு சுதர்சன் கணபதிப்பிள்ளை அவர்களுக்கு அவுஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகத்தால், கணக்கியலில் அவர் எழுதிய ஆய்வேடுகளுக்காக ஆய்வு முனைவர் பட்டம், ஏப்ரல் 19ம் திகதி வழங்கப்பட்டது. அந்நிகழ்வில் அவர் குடும்பத்தாருடன் கலந்து கொண்ட நிழற்படங்கள் கீழே இணைக்கப்படுகின்றன.

அவர் ஆர்வம் காட்டிய ஆய்வுகள் தன்விபரம் ஆகியவற்றை பின்வரும் இணைப்பைக்  ‘கிளிக்’ செய்து அறிந்து கொள்ளலாம்.

http://www.deakin.edu.au/profiles/sutha-kanapathippillai

அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் தமது வாழ்த்துக் களையும் பாராட்டுக்களையும் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியமும் வளலாய் இணையமும் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கின்றன.

December 3, 2015

சுதர்சன் கணபதிப்பிள்ளை டீக்கின் பல்கலைக் கழகம் அவுஸ்திரேலியா இல் வர்தகம் மற்றும் சட்ட பீடத்தில் கணக்கியல் துறையில் விரிவுரையாளராகக் பணியாற்றி வருகிறார். விரிவுரையாளராகப் பணியாற்றும் இவருக்கு கணக்கியல் துறை தலைவர், ஆசிரியப் பணியில் இவரின் சிறப்புப் பங்களிப்புக்காக கார்த்திகை மாதம் 26 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு கணக்கியல் துறை விருது வழங்கி கௌரவித்துள்ளார்.  இவருக்கு இவ்விருது கிடைத்தமையை வளலாய் இணையம் பாராட்டி மகிழ்வதோடு இச்செய்தியை புலம்பெயர் நிலங்களில் வாழும் வளலாய் உறவுகளுடன் பகிர்வதில் பெருமிதம் கொள்கின்றது.

கவிதாயினி சுதா குமரன்

August 20, 2017
எங்கள் வாழ்வும் எங்கள் வழியும்
சந்நிதியான் சந்நிதியில்.....

தொண்டைமான் ஆறு - அது
தொடுகிறதே கடலோடு
கண்கவர் வண்ணம் எங்கும்
கவின்சோலை நிழலோடு
அண்டையிலே அவனிருப்பான்
தொண்டர் குறை தீர்த்திடுவான்
எண்ணி வரும் அனைவரையும்
ஏற்றிடுவான் கனிவோடு
கண்டவரும் கேட்டவரும்
கனிந்தங்கே உருகிடுவர்
இன்றுவரை அவனருளே
சந்நிதியான் சந்நிதியில் - செல்வச்
சந்நிதியான் சந்நிதியில்

வேலெடுத்த வேந்தனுக்கு
வேறில்லை அங்குருவம்
ஓதுவார் எல்லோரும்
ஓதலாம் என்றே
ஓதாதார் பூசையிலே
ஒளிவெள்ளம் பெருகிவிடும்
கற்பூர ஒளி தீபம்
கண்வழியே மனங்கூடும்
காற்றோடு அதன் தூபம்
கருத்திருந்து மணங்கமழும்

அன்னதானக் கந்தனென்றால்
அறியாதார் யாருளரோ
பசியறியா வாழ்வளிக்க
பட்டினியைப் புறந்தள்ள
சந்நிதியான் திடம் கொண்டான் அங்கோர்
அன்னதான மடம் கொண்டான்

ஆடி அசைந்து மெல்ல விட
ஆவணியில் விழாக்காணும்
கோடை வெயில் ஒளியோடு
கொடியேற்றம் திறம் சேர்க்கும்
மூவைந்து நாட்களுமே
முழுவிழாக் கோலம் கொள்ளும்
தேர் தீர்த்த நாட்பொழுதில்
ஊர்மனையில் யாரிருப்பார்
திருத்தலமும் திருவிழாவும்
கருத்தினிலே நிறைந்துவிட
நடந்தும் கடலைக் கடந்தும்
புதுப்பாலம் தனிலே
புத்துணர்வாய்ப் புகுந்தும்
அலையாடும் கடலருகே -சனத்
திரள் வெள்ளம் தரைதள்ளும்

வாழ்வோடு கலந்திருப்பான் - எங்கள்
வழிதோறும் தடம் பதிப்பான்
வேலாளன் தாராளம்
விழி செல்லும் அவன் மீதே
பாரெங்கும் படர்ந்துவிட
நேர்ந்துவிட்ட போதினிலும்
சார்கின்றோம் அவன் கழலே

October 27, 2016

திரு நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின்
ஈராண்டு நிறைவு 
நாள் - 05.11.2016.
திதி - ஐப்பசி வளர்பிறை சஷ்டி (ஆறாம் நாள்)

ஒரு விவசாயி

கலட்டியும் கள்ளியும் கலந்த பரப்பில்
விரட்டி விரட்டிப் பசுமை தரும் விவசாயக்குடியில்
பிறந்ததால் பிறந்தது பெருநாட்டம்
இறக்கையிலும் இருந்தது பசுந்தோட்டம்

இரட்டைப் பயிர்ச்செய்கையில் என்றுமே நாட்டம்
இதனால் விளைந்தது பற்பல மாற்றம்.
பேராற்றங் கரையோரம் தனிலும் - உன்
பேராற்றல் கண்டது மருததேசம்

நன்செய் புன்செய் நிலமெல்லாம்
உன் செய் நிலமானால் உயரும்
விண்செய் முகில்கூட மயங்கும்
தண்மையின் உருமழையாய் மலரும்.

ஏர் பூட்டும் இயந்திரமும் கொண்டாய் - அதனால்
நேரேற்றம் பற்பலவும் கண்டாய்
ஏறெடுத்துப் பார்க்கும் வண்ணம் - எம்மை
ஏடெடுத்துப் படிக்க வைத்தாய்

பலவரிகள் புனைந்த மகள் நானே
ஒருவரியும் எழுதிலனே நினையே
இக்கவியை சமர்ப்பிக்கும் நாளே
அக்குறையும் நிவர்த்தியுறும் தானே.

கவிதாயினி சுதா குமரன்

July 13, 2016

வளலாய் மண்ணிலே பிறந்து வளர்ந்து வாழ்ந்து முடித்த எமது பேரனார் ஆறுமுகம் நாகலிங்கம் அவர்கள் மறைந்து இருபத்தைந்து வருடங்கள் கடந்து விட்ட நிலையில் அந்நாளில் அவர்கள் வாழ்ந்த காலத்தின் சுவடுகள் கலந்த பதிவுகள்

பனை

கற்பனை உலகம் கண்ட மரம்
விண்ணுலகில் உண்டாம் கற்பகதருவாம்
இப்புவி தன்னில் அப்பயன் தந்தது
கற்பனை மரமல்ல கரும்பனை ஒன்றே

பார்த்துப் பார்த்து வளர்க்கவில்லை
ஏந்தி நீரை ஊற்றவில்லை
கிளையின்றி வளர்ந்தாலும்
அளவின்றிப் பயனளிக்கும்

கீழிருந்து மேல் நோக்கி
கிழங்கு தொட்டு வளமாகும்
ஊர்தோறும் பனந்தோப்பு
உயரந்துயர்ந்து வளரந்திருக்க

நாடு தோறும் சூழ்ந்த வினை
நலிவடைய வைத்ததுவே
கூவிவந்த குருட்டுக் கணை
ஆவிகெடச் செய்ததுவோ ?
ஒங்கி நின்ற உருவங்கள்
ஒருக்களித்துப் படுத்தனவோ ?

உத்தமர்க்கு உதாரணமாய்
இத்தரணி புகழ்கின்ற
உன் நிலையே இதுவென்றால்
உன் நிழலிருந்தோர் நிலையென்ன ?

முன்னோர் கண்ட பன்னம்

ஆடம்பரப் பொருட்களுக்கு
அவசியமற்ற காலத்தில்
கண்ணைப்பறிக்கும் நிறங்களைக்
கருத்தில் கொள்ளா நேரத்தில்
முன்னோர் எண்ணத்தில் உதித்து – கை
வண்ணத்தில் வளரந்த கலை பன்னம்.

பனையிலே ஓலை வெட்டி
பக்குவமாய் பதப்படுத்தி
பத்திரமாய் அதை வார்ந்து
அத்தனையும் கழிவின்றி
நார் ஈர்க்கு ஓலையென
நற்பன்னப் பொருளாகும்.

படுத்துறங்க பாய் முதலாய்
எடுத்து வைக்கப் பெட்டி கடகம்
பாரம் தூக்கப் பறியிருக்கும்
நாரும் அதில் சேர்ந்திருக்கும்.

வண்ண வண்ணப் பெட்டிகள்
வகை வகையாய் அடுக்கி வைத்து
எண்ணுகின்ற பொழுதெல்லாம்
எடுத்து அதில் பொருள் வைப்பர்.

கையடக்கப் பெட்டி முதல்
கனரகப் பெட்டி வரை
ஒவ்வொன்றாய்ப் பெயர் வைத்து
ஒன்றொன்றாய் சேர்த்திருப்பர்

இயற்கையொடு இயைந்த வாழ்வில்
இன்னலில்லா இன்பமயம்
செயற்கை கண்ட நெகிழியிலே
சிதைந்தது பன்னமும் தான்

பன்னத்தைப் பறிகொடுத்து  -  பிளாஸ்டிக்
வண்ணத்தில் வாழ்வென்று
கண்கவரும் பொருட்களிலே
எண்ணத்தைச் சிதறவிட்டோம்

என்னதான் கண்டோமென்று கண்ணைத்
திறக்கையிலே வழியெதுவும் தெரியவில்லை
விழி பிதுங்கி நிற்கின்றோம்.

 

வளலாயில் பட்டங்கள்

பொங்கல் காலம் வரப் பொங்குமின்பம் கூடவர

வங்கக் கடலோரம் வானுயர்ந்த பட்டம் விட

வாலிப நெஞ்சமெல்லாம் கோலப்பட்டம் கட்ட

நூலும் கோலுமாகத் திரிந்த காலமது.

 

கொக்குகள் வானில் கொடுநஞ்சுப் பாம்பைக்

கட்டியிழுத்துச் செல்வது போலிருக்கும் பல பட்டம்

நூலோடு நூலாக இணைந்திருக்கும் மின்னோட்டம்

உடுக்களோடு போட்டியாக ஒளி விளக்கேற்றி வைக்கும்.

 

மின்மினிப் பூச்சியெல்லாம் விண்ணிலே வீடுகட்டி

விரும்பி வாழப் போனதுபோல் நினைவுவரும்

மேல்வானின் பட்டங்கள் வளலாயைத் தரிசித்து

கண் சிமிட்டிச் சிரிப்பது போல் கற்பனையும் அதில் வளரும்.

 

வளலாயின் வான் வெளியில் வலம் வந்த பட்டமெல்லாம்

காணாமல் போய்விடக் கனடாதான் காரணமா?

பாழும் போர்சூழ்ந்து வளம்நிறைந்த வளலாயும்

மாளும் நிலையொன்று வந்தது தான் காரணமா?

 

வாழ்க்கை ஒரு வட்டம் என்ற வாக்கியமே மெய்யாக

வசப்பட்டிருக்கிறதே வளலாயும் மீண்டுமின்று

பறந்து சென்ற பட்டங்கள் திரும்பியினித் தான்வருமா?

வங்கக் கடற்காற்றை வசம் செய்யும் நிலைவருமா?

கவிதை வரிகள் சுதா குமரன்

மாணிக்கவாசகர் என்னும் பெயரேற்று - வளலாய்
மண்ணின் மைந்தனாக என்றும் வாழ்ந்தவரே!
மக்களுக்கு நல்ல தந்தை மட்டுமன்றி - மரு
மக்களுக்கும் நல்ல மாமனாக மிளிர்ந்தவரே!

எண்ணில் அடங்காதோர் எண்ணியலைக் கற்பதற்கு
கண்ணெனக் கணக்கறிவை கருத்துடனே ஈந்தவரே!
ஆசிரியப் பணியோடு ஆளுமையும் மேலோங்க
அரும்பணிகள் பலசெய்து அதிபராக உயர்ந்தவரே!

வானுறையும் தெய்வத்தின் வசப்பட்ட நாள் கடந்து
ஆண்டொன்று ஆனதென்று அறிவுதான் சொல்கிறது.
நியூட்டன் சொல்லாத நினைவீர்ப்பு விசையுந்த
நிகழ்வுகள் தான் முன்வந்து நிழலாகப் படிகிறது.

அகன்ற பெருவெளியில் ஒளியேற்றும் கதிரவனாய்
பகன்ற பெருங்கல்வி அகல் விளக்குகளாய் அகிலமெங்கும்
சுழன்று சுடர்விட்டு சுற்றிவரும் வேளையிலே
மறந்தும் உமையுலகம் என்றேனும் மறந்திடுமா?

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி

என்றும் குடும்பத்தினர் நினைவில்

கவிதை வரிகள் அன்பு மருமகள் திருமதி சுதா குமரன்

பாக்கு நீரிணையின் பருவக் காற்றுகள் தாலாட்டிச்செல்லும் ஒரு அழகிய கிராமம் வளலாய். கடற்கரையோடு கூடிய மணற்பாங்கான பிரதேசத்தையும், குளக் கரையோடு கூடிய களிமண் பிரதேசத்தையும், இன்னொரு புறத்தே செக்கச் சிவந்திருக்கும் செம்மண் வளத்தையும் கொண்ட பிரதேசம். ஆங்காங்கே கூடாரம் அமைத்தது போல் ஓங்கி வளர்ந்திருக்கும் பனை மரத்தோப்புகள் - அணில்களின் கூடாரம். உணவுப் பொருளுடன் எட்டிப் பார்த்தால் கன்னத்திலே கோலமிட்டு தட்டிப்பறித்துச் செல்லும் காக்கைகளின் சரணாலயம். மிளகாய்த் தோட்டங்கள், கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்லும் பச்சைக் கிளிகளின் மாநாட்டுக் கூடம். இந்த ஊரில் பெண்களைப் பார்த்தால் ரம்பை, ஊர்வசியிடம் வரம் வாங்கி வந்திருப்பார்களோ என எண்ணத் தோன்றும். 

இவையெல்லாம் இன்றல்ல. அது ஒரு காலம். வான் வழித் தளத்துக்கு வழி கொண்ட காரணத்தாலோ என்னவோ இரண்டு தசாப்தங்களின் இருள் சூழ்ந்த படலத்தில் இங்கே கானகம் குடி புகுந்தது. மீண்டும் காலத்தின் கதவுகள் மெல்லத் திறக்கப் பட்டு இவ்வூரின் ஒரு பகுதிக்கு வழி விடப்பட்ட போது வளலாய் விநாயகப் பெருமானின் வாயில் மீண்டும் தட்டப்பட்டது. அவ்வேளையிலே என் மனதில் தோன்றிய வரிகளின் விவாதத்தை இங்கே பிரதி செய்வதில் தவறில்லை என எண்ணுகின்றேன். நன்றி.

வளலாய்ப் பிள்ளையார்
*******************
வளலாய்ப் பதியுறையும்
வேழ முகப் பெருமானே !
வள்ளி மணாளனுக்கு மூத்தவனே
பிள்ளையார் எனும் பேறு பெற்றவனே!

ஆலமரம் நுழை வாயில்
அரசமரம் முன்வாயில்
அமர்ந்திருக்கும் கோலமது
ஆகீசன் உன் சிறப்பு.

ஊரெல்லாம் ஒலியெழுப்பும்
உயர் மணிக் கோபுரத்தின்
கண்டா மணியோசை
டாண் டாண்என்றொலிக்கும்

சங்கு ஒலிக்கும் சங்கீதம்
சந்தனத்தின் நறுமணத்தில் - உன்
சந்நிதியில் சனத்திரளாய்
சரணடைய வைப்பவனே!

நாரதரின் சதிவலையில்
நாதன் அவன் சிக்கி நின்று
ஞாலத்தைச் சுற்றி வர
கால அவகாசம் இட்டான்.

பெருச்சாளி மீதேறிப்
பெருங்கடலைத் தாண்டாமல்
அருகிருந்த பெற்றோரை
ஆறுதலாய் சுற்றி வந்தாய்.

உயர்மதிக்காரன் என்று
உன்னைப் புகழ்ந்தார்கள்
கணபதியே உன் வித்தையை நீ - இக்
கற்பதியில் காட்டினாயோ?

வளலாய்ப் பிள்ளையாரே
வனவாசம் போ என்று
யார் உன்னைப் பணித்தாரோ
நாரதரும் வந்தாரோ?

பெருச்சாளி மீதேறிப்
பெருங் காட்டைத் தேடாமல்
கருவறையில் அமர்ந்தபடி
காடாக்கி வாழ்ந்தாயோ?

வனவாசம் முடித்திருக்கும்
வளலாய்ப் பிள்ளையாரே
இருகரமும் செவிபற்றி
இருந்து எழுந்து வணங்குகிறோம்.

வளலாயின் வலி சுமந்த வரிகளாக இப்பதிவு 
******************************

எந்தையும் அவர் தந்தையும் 
சிந்தையிலே நிறைவுடனே 
சிந்திய வியர்வைச் 
செம்மையின் செழுமை எங்கே?
வரலாற்றுச் சுவடுகளின் 
வாழ்விடங்கள் தானெங்கே?


சிட்டுக் குருவிகளாய் 
சிறகடித்துப் பறக்கையிலே 
பட்டுக் கன்னங்களை 
தொட்டுத் தழுவிய 
மல்லிகையின் மணம் சுமந்த 
மெல்லிளந் தென்றல் எங்கே?


அணிலோடு இணையாக 
தனியாக ஊஞ்சலிலே 
அரங்கேற்றம் செய்யாமல் 
ஆடிய மா மரமெங்கே?
தேடிய மாங்கனி எங்கே?

வெள்ளம் வழிகையிலே 
துள்ளியதில் விளையாடி 
பள்ளிக்கு நாம் சென்ற 
வெள்ள வாய்க்கால் வீதி எங்கே?

புங்கடி புளியடி 
இவ்விடம் எவ்விடமென 
கண்ணைத் திறந்து கொண்டு -சொந்த 
மண்ணில் நின்று கொண்டு 
கேட்டுக் கொள்கின்ற 
வாட்டம் தானென்ன?


வளலாயின் வலி சுமந்த 
வரிகளாக இப்பதிவு 
பெரும்பான்மைப் பதிகளுக்கு 
பொருந்துகின்ற ஒரு பதிவு.

March 20, 2018

December 21 2021
 
நேற்று - கடந்தகாலம்
நேற்று வரை இருந்த உறவுகளின் பட்டியல்
நீண்டு செல்கிறது
நேற்றுவரை என்று
நிகழ்வுகள் சொல்லலாம்
காற்றிலே போனதென்று கற்பனையும்
செய்யலாம் மாற்ற முடியாது
மனம் நிறைந்த பலவற்றை வாழ்ந்த காலத்தில்
வரைந்த தடங்கள்
எழுந்து நிற்கும்
எண்ணச் சிலைகள்
மூழ்கி விடப்போவதில்லை
விழியோர வழி நீரில்
காலமும் ஒரு கவிதை தானன்றோ
எழுதுவதென்னவோ
இருவிழி நீரால்
கவிதாயினி சுதா குமரன்
August 26 2024
August 22 2024
July 26 2024

Content 5

தொல்காப்பியம் கூறும் நால்வகை நிலங்களில் வயலும் வயல் சார்ந்த நிலமுங் கொண்ட மருதநிலம் தலைசிறந்தது. அத்தகைய மருதநிலப் பண்புகளை மையமாகக் கொண்டதே வளலாய் கிராமம். நீர்வள நாகரிகத்தின் ஆரம்பகால நிகழ்வுகளை நினைவு கொள்ளும் வகையில் இங்குள்ள வயல் நிலங்களும் குளங்களும் காணப்படுகின்றன. குளங்களின் நீர் பயன்பாடு, நீர்ப்பங்கீடு என்பவற்றை நடைமுறைப்படுத்த ஏற்பட்ட நிர்வாகம், அதனைத் தொடர்ந்து அமைந்த கோவில்கள், வைத்தியசேவை, கல்விச்சேவை மற்றும் சமுகப்பணிகள் என்பனவற்றை நிர்வகித்தமைக்கான வரலாறுகளைக் கொண்டது  எமது வளலாய் கிராமம். ஆரம்பகால கிராம நிர்வாகம் பற்றிக் குறிப்பிடும் உள்ளுராட்சிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அறிக்கையும் இவற்றுக்குச் சான்றாகின்றது. இத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட வளலாய் கிராமம் ஈழத்தின் தலையாய் விளங்கும் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் கடலும் கடல்சார்ந்த இடமாகப் பாக்குநீரிணையும் எமது கிராமத்தை வளப்படுத்துகின்றன.            மேலும் படிக்க...

தலைமைத்துவங்களை வரலாற்றில் உருவாக்கிய மருதநிலத்தின் பண்புகளை மையமாக கொண்டதே வளலாய் கிராமமாகும் நீர்வளநாகரிக காலத்தில் இருந்தே மக்கள் குடியிருப்புக்கள் இக்கிரமத்தில் இருந்துள்ளது. குளங்கள் பலவற்றிக் கிடையே நாகதம்பிரான் கோவில் அதனைசுற்றி வயல்கள் வயல்களினை அடுத்து தோட்டங்கள் அதனை சுற்றி மேட்டு நிலத்தில் குடியிருப்புக்கள்.       மேலும் படிக்க...

இங்குள்ள வளலாய் பிள்ளையார் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது ஆகும். யாழ்பாண அரசர் காலத்தில் இருந்து வழிபடப்படும் பழம் பெரும் கோவில் இதுவாகும். இக்கோவிலின் ஆதிவரலாறு தமிழ்நாடு கன்னியாகுமாரி மாவட்ட நாகர்கோவிலில் இருந்து ஆரம்பமாகிறது. 15ம் நூற்றாண்டில் சேரமரபினரான திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் நாகர்கோவில் பகுதி  இருந்த காலத்தில், கார்காத்தவேளாளர் குல நிலப் பிரபுவான வீரமாணிக்கம் என்பவர் அப்போதைய மன்னர் ஆட்சியில் அங்கு விளையும் உணவுப் பொருட்களை அரசுசார்பில் பொறுப்பேற்று சேமித்துப் பாதுகாத்து வைப்பதோடு, பற்றாக் குறை ஏற்படும் காலத்தில் அரசு ஆணைப்படி பொதுமக்களுக்கு வழங்கும் பொறுப்பாளராகவும் இருந்தார்.  மேலும் படிக்க...

தன்னார்வல மக்கள் குழுக்கள்...

கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய உறுப்பினர்கள்
Union of Valalai People Living in Canada

செயல் அலுவலர்கள்

தலைவர் : கருணாமூர்த்தி கணபதிப்பிள்ளை B.Sc.
President : Karunamoorthy Kanapathipillai B.Sc.

செயலாளர் : கிருபாகரன் ஏகாம்பரம் M.Sc.(Eng.)
Secretary : Kirupakaran Ehamparam M.Sc. (Eng.)

பொருளாளர் : சிவபாலன் சின்னத்தம்பி
Tresurer : Sivapalan Sinnathamby

வளலாய் பாரதி சனசமூக நிலைய உறுப்பினர்கள்
Valalai Bharathi Community Centre

செயல் அலுவலர்கள்

தலைவர் திரு கு.பிரபாகரன்
President : Mr K Pirapakaran

செயலாளர் செல்வன் ந.கோகுலராஜ்
Secretary : Master N Kokularaj

பொருளாளர் திரு க. சிறிஸ்கந்தராஜா
Tresurer : K. Sriskantharajah

உப தலைவர் திரு இ.அஜந்தன்
Vice President : Mr.R.Ajanthan

உப செயலாளர் திரு கி.சிவயோகம்
Vice Secretary : Mr.K.Sivayogam

நெறிப்படுத்துபவர் திரு மூ.குமாரசாமி (நிறுவனர், பூங்கொடி அறிவிலயம், வளலாய்)
Mentor Mr.M.Kumarasamy (Founder, Poonkodi Arivalayam, Valalai

கணக்காய்வாளர் திரு வெ.ஜதீபன்
Auditor: Mr.V.Jatheepan

செயற்குழு உறுப்பினர்கள்

திரு செ.மோகனதாஸ் - Mr.S.Mohanadas

செல்வன் த.தவயோகி- Master T.Thavayoki

செல்வன் கு.பிரணவன் - Master K.Pranavan


செல்வன் சி.பாணுசாந்- Master C.Banuchandth

செல்வன் சி.அனுதரன்- Master C.Anutharan

செல்வன் இ.நிலக்சன்- Master R.Nilaxan

திரு ச.நந்தகுமார் - Mr.S.Nandhakumar

செல்வி நி.தர்பிகா (நூலகர்) - Miss. N.Tharpika (librarian)

திருமதி மு.ஜெனதா - Mrs. M.Jenatha

Arulmihu Valalai Pillayar Temple Board of Trustee Members
அருள்மிகு வளலாய் பிள்ளையார் தேவாலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள்

செயல் அலுவலர்கள்

தலைவர்:- திரு பொன்னம்பலம் தனபாலசிங்கம் - +94776034513
President : Mr Ponnampalam Thanapalasingam

செயலாளர்:- திரு கணபதிப்பிள்ளை செல்வநாயகம் - +94770474141
Secretary:- Mr. Kanapathipillai Selvanayakam

பொருளாளர்:- திரு கிருஸ்ணபிள்ளை சிவயோகம் - +94771606843
Tresurer:- Mr. Krishnapillai Sivayokam

உப தலைவர் -செல்வன் குணசேகரன் தூயவன்
Vice President:- Master Kunasekaran Thooyavan

உப செயலாளர் - செல்வன் சிவசுப்பிரமணியம் அனுதரன்
Vice Secretary:- Master Sivasupramaniyam Anutharan

கணக்காய்வாளர் - திரு செல்லையா தங்கராசா
Auditor:- Mr Sellaiya Thangarasa

ஆலோசகர் - நா.மகேந்திரம்
Patron:- Mr N Mahenthiram

செயற்குழு உறுப்பினர்கள்

திரு குமாரசாமி பிரபாகரன் / Mr. Kumarasamy Pirapakaran

திரு செகசோதி இராசேந்திரம் / Mr. Mr Jegasothi Rasenthiram

திரு சண்முகநாதன் ஞானரூபன் / Mr. Shanmuganathan Gnanaruban

திரு சி.சசிகாந் / Mr. S. Sasikanth

செல்வன் ச.சிவப்பிரியன் / Master S.Sivapiriyan

செல்வன் இ.நிலக் ஷன் /Master E. Nilakshan

திரு சச்சிதானந்தம் நந்தகுமார் /Mr S. Nanthakumar
வளலாய் பெரிய நாகதம்பிரான் கோவில் அறங்காலர் சபை உறுப்பினர்கள்
Valalai Periya Nagathampiran Temple Board of Trustee Members

செயல் அலுவலர்கள்

தலைவர்:- செ துரைரத்தினம் சமாதன நீதவான்
(முழு இலங்கை)
0776743932

President : S. Thurairatnam JP (All Island)

செயலாளர்:- திரு கிருஸ்ணபிள்ளை குமரகுருலிங்கம்
Secretary:- Mr. Krishnapillai Kumarakurulingam

பொருளாளர்:- திரு கணபதிபிள்ளை பாலசுப்பிமணியம்
Tresurer:- Mr. Kanapathippillai Balasubramaniyam

உப தலைவர் - சிவநாயகம் சிவேஸ்வரன்
Vice President:- Mr. Sivanayagam Sivaneshwaran

செயற்குழு உறுப்பினர்கள்

திரு வ. கந்தசாமி - 0779001321 / Mr. V. Kanthasamy

திரு நா. தவகுமார் / Mr. N. Thavakumar - 0777574579

திரு சிவசம்பு பரமானந்தம் / Mr. S. Paramanantham

திரு த. கதிர்காமநாதன் / Mr. T. Kathirkamanathan

திரு ஏரம்பு சிவலிங்கம் / Mr. Erampu Sivalingam

திரு செல்வரத்தினம் மோகனதாஸ் / Mr. S. Mohanathas

திரு பாலகிருஸ்னன் குணாகரன் / Mr. P. Gunakaran

வளலாய் மேற்கு மீள்குடியேற்ற செயற்குழு உறுப்பினர்கள்
Valalai West Resettlement Committee Members

செயல் அலுவலர்கள்

தலைவர்:- திரு செல்லப்பு துரைரத்தினம்
               சமாதன நீதவான் (முழு இலங்கை)

President:- Mr. Sellappu Thurairatnam J.P. (All Island)

செயலாளர்:- திரு கி். குமரகுருலிங்கம்
Secretary:- Mr. K. Kumarakurulingam

பொருளாளர்:- எஸ் சிவேஸ்வரன்
Tresurer:-Mr. S. Siveshwaran

Rural Development Society Members
வளலாய் கிராம அபிவிருத்திச்சங்க குழு உறுப்பினர்கள்

செயல் அலுவலர்கள்

தலைவர்:- திரு செல்லையா தங்கராசா
President:- Mr. S. Thangarasa

செயலாளர்:- திரு செல்லத்தம்பி சுதன்
Secretary:- Mr. Sellathambi Suthan

உப தலைவர்:- திரு பவுலின் அப்பு எட்வேட் உதயகுமார்
Vice President:- Mr. Poulin Appu Edword Uthayakumar

உப செயலாளர்:- திரு பஸ்தியாம்பிள்ளை செல்வரத்தினம்
Vice Secretary:- Mr. Basthiyampillai Selvarathinam

பொருளாளர்:- திரு செல்லப்பு துரைரத்தினம்
                          சமாதன நீதவான் (முழு இலங்கை)
Tresurer:-Mr. Sellappu Thurairatnam J.P. (All Island)

செயற்குழு உறுப்பினர்கள்

திரு ந. மகேந்திரம் / Mr. N. Mahenthram

திரு நா. தவகுமார் / Mr. N. Thavakumar

திரு செ. மோகனதாஸ் / Mr. S. Mohanathas

திரு ம. ரமேஸ் / Mr. M. Ramesh

திருமதி மேரி புஸ்பராணி / Mrs. Mary Pushparani

திரு சி. செல்வரத்தினம் / Mr. C. Selvarathinam

திரு மா. சயேந்திரம் / Mr. M. Sayenthiram

Pillaiyar
Pillaiyar