April 25, 2015
|
வளலாய் கிராம அபிவிருத்திச்சங்க குழுத் தெரிவு
வளலாய் கிராமத்திலுள்ள மக்கள் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவ நடவடிக்கை காரணமாக தமது சொத்துக்களையும் வீடுகளையும் இழந்து இடம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கிராமமானது. வளலாய் கிழக்கு, மேற்கு, வடக்கு எனும் பிரிவுகளை உள்ளடக்கிய 1350 குடும்பங்களின் சுமார் 5000 பேர்களைக் கொண்ட கிராமம். இக்கிராமம் மக்களின் ஒரு தொகுதியினர் அதாவது வளலாய் கிழக்குப்பகுதியைச் சேர்ந்த 450 குடும்பங்கள் 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீள்குடியேற்றப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதோடு ஏனைய பிரதேசங்கள் நீண்டகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடணப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சுமார் 21 வருடங்களுக்கு பின்னர் 2011.11.29 ஆம் திகதி வளலாய் மேற்கின் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டதோடு மீண்டும் 2015.03.13 ஆம் திகதி 25 வருடங்களுக்கு பின் வளலாய் மேற்கின் மிகுதிப்பகுதியும் வடக்குப்பகுதியும் மீள்குடியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வளலாய் மேற்கு வடக்கு பகுதியை நோக்குகின்றபோது மக்களின் குடியிருப்புக்கள் முற்று முழுதாக அழிக்கப்பட்டு காடுகளும் பற்றைகளும் நிறைந்த பிரதேசமாக காட்சியளித்ததோடு மிதிவெடி அபாயமுடையதாகவும் காணப்பட்டது. இக்கிராம மக்களின் ஜீவனோபாய தொழிலாக விவசாயம் மீன்பிடி கூலித்தொழில் என்பனவாக உள்ளன. இதுவரை தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலும் அரச நிறுவனங்களினாலும் சில வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் இக்கிராமம் அபிவிருத்தியை வேண்டி நிற்பது குறிப்பிடத்தக்கது. 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் திட்டத்தின்கீழ் 123 வீடுகள் வழங்கப்பட்டன. இதில் வளலாய் கிழக்குப்பகுதியில் 88 வீடுகளும் வளலாய் மேற்ககில் 35 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் வளலாய் மேற்கில் 60 குடும்பங்களும் வளலாய் வடக்கில் 140 குடும்பங்களும் மீளக் குடியேறுவதற்கான பதிவுகளை மேற்கொண்டுள்ளன. இக்கிராமத்தின் அபிவிருத்தித்திட்டத்தினை சிறந்த முறையில் ஒழுங்கமைத்து நடைமுறைப்படுத்துவதற்கு பலமான ஒரு அமைப்பு அவசியமாக உள்ளதனால் இக்கிராமத்தின் பழம்பெரும் அமைப்பாக காணப்படுகின்ற வளலாய் கிராம அபிவிருத்திச் சங்கத்தினை மீள உயிர்ப்பிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 18.04.2015 அன்று வலிகாமம் கிழக்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், வளலாய் கிராம அலுவலர் திரு ச. சாந்தரூபன் வளலாய் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பார்த்தீபன் கவிநாயகி ஆகியோர் முன்னிலையில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்கள்:- 1. தலைவர்:- திரு செல்லையா தங்கராசா 8. கணக்காய்வாளர்:- திரு வயிரமுத்து கந்தசாமி (ஓய்வுபெற்ற உள்@ராட்சி ஆணையாளர்) தெரிவு இடம்பெற்றதன் பின்பு புதிய நிர்வாகத்தின் மூலம் இக்கிராமத்தின் அவசிய தேவைகளாக குறிப்பிடப்பட்ட விடயங்கள்
|